செய்தியாளர் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை - மத்தியப்பிரதேச முதலமைச்சர்

மத்தியப்பிரதேசத்தில் நடந்த செய்தியானர் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்துள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா என்பவர் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, மணல் கொள்ளை கும்பல் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தீப் சர்மா காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சந்தீப் சர்மா மீது வேகமாக வந்த லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் , “செய்தியாளர் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார். மேலும், ‘செய்தியாளர்களைப் பாதுகாப்பது அரசின் முக்கிய நோக்கம்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த செய்தியாளர் சந்தீப் சர்மாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds