அணைகளை சீரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி : மத்திய அரசு ஒப்புதல்
நாடு முழுவதும் உள்ள அணைகளைப் புனரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி செலவிழான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.வெளிப்புற உதவி அணை புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் (டி.ஆர்.ஐ.பி) நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுச் செயல்திறனை மேம்படுத்திச் சீரமைக்க இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி ரூ.10,211 கோடி மதிப்புள்ள இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031 வரை செயல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
You'r reading அணைகளை சீரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி : மத்திய அரசு ஒப்புதல் Originally posted on The Subeditor Tamil
More India News
READ MORE ABOUT :