மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஊழல்.. தமிழக ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நிபந்தனைகளை மாற்றியதாக கூறப்பட்ட புகாரில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகாசியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது மனைவி நிஷாந்தினியும் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். ராஜமாணிக்கம், கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், கேரள அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது இவர் கேரள ஐடி உள்கட்டமைப்பு நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக இருந்த போது தான் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

மெட்ரோ ரயிலுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இவரது தலைமையில் தான் நடைபெற்றது. அப்போது கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தும் போது சில நிபந்தனைகளை தளர்த்தி அந்த நிறுவனத்திற்கு சலுகை அளிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்தப் புகார் மீது கேரள அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இதற்கிடையே ராஜமாணிக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மூவாற்றுப்புழாவில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக அவர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் ராஜமாணிக்கத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :