Advertisement

பரபரப்பாக நடைபெறும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்.. அமித்ஷா கோஷம் பலனளிக்குமா?

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வீழ்ந்து வருவதால், மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளை மூர்க்கத்தனமாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா தலைநகரான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஐதராபாத்தில் எப்போதும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே காணப்படும். கடந்த 2016 மாநகராட்சி தேர்தலில் 45.29 சதவீதமும், மக்களவை தேர்தலில் இந்த ஐதராபாத் தொகுதியில் 44.75 சதவீதமும்தான் பதிவாகின. இம்முறை கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு இடையே வாக்கு சதவீதத்தை அதிகரிக்கத் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

மாநகராட்சியில் 150 வார்டுகள் உள்ளன. மொத்தம் 74 லட்சத்து 67,256 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 9101 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் துப்பக்கா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, தெலங்கானாவில் காலூன்ற வேண்டும் என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.இதனால், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு அவரே வந்து தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது, ஐதராபாத்தில் நிஜாம் கலாச்சாரத்தை ஒழித்து மினிபாரத் உருவாக்குவோம் என்று இந்து மதத்தினரைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதே போல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்து பிரச்சாரம் செய்யும் போது, நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யாநகர் என்று பெயர் மாற்றுவோம் என்று கூறினார்.

இதே போல், பாஜகவின் பல முக்கிய தலைவர்களும் வந்து பிரச்சாரம் செய்தனர்.
மேலும், ஐதராபாத்தில் அமித்ஷா பேட்டியளிக்கும் போது, முதலில் இந்த மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றுவோம். அடுத்து தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல், சட்டசபைத் தேர்தல் போல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க
free-land-in-kashmir-for-sri-lankan-cricketer-muralitharan-jammu-and-kashmir-government-in-controversy
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளீதரனுக்கு காஷ்மீரில் இலவச நிலம்: சர்ச்சையில் ஜம்மு காஷ்மீர் அரசு
what-the-police-did-in-the-middle-of-the-road-in-a-bmw
பி.எம்.டபிள்யூவில் வந்து சாலையின் மத்தியில் செய்த காரியம்... தட்டி தூக்கிய போலீஸ்
champions-trophy-betting-alone-is-worth-rs-5-000-crore-mistletoe-caught-in-delhi
சாம்பியன்ஸ் டிராபி : பெட்டிங் மட்டும் 5 ஆயிரம் கோடி டெல்லியில் சிக்கிய புல்லுருவிகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்