தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்க முயற்சி கர்நாடக உயர்நீதிமன்றம் தடை

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்களை அமைச்சர்களாக்கக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா முயற்சித்தார். ஆனால் அதற்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.கடந்த வருடம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து 17 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதையடுத்து அவர்கள் அனைவர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து 17 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் விஸ்வநாத், நாகராஜ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேர் உண்டு. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் இந்த 17 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் அந்த தேர்தலில் விஸ்வநாத், நாகராஜ் மற்றும் சங்கர் ஆகிய 3 பேரும் தோல்வியடைந்தனர். கட்சி தாவிய அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பாஜக உறுதி அளித்திருந்தது.

ஆனால் விஸ்வநாதன் உட்பட 3 பேர் தோல்வியடைந்ததால் அவர்களை அமைச்சர்களாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் எம்எல்சி பதவி வழங்கி பின்னர் அவர்களை அமைச்சர்களாக்க முதல்வர் எடியூரப்பா தீர்மானித்தார். இதன்படி 3 பேருக்கும் எம்எல்சி பதவி சமீபத்தில் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை அமைச்சர்களாக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :