தலித் என்பதால் முதலமைச்சர் என்னை அடித்தார் - பாஜக எம்.பி. குமுறல்

உத்தரப்பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சோட்டேலால், தான் தலித் என்பதால் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னை அடித்ததாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Apr 6, 2018, 14:25 PM IST

உத்தரப்பிரதேச பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சோட்டேலால், தான் தலித் என்பதால் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னை அடித்ததாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பாஜக எம்.பி. சோட்டே லால் கர்வார். இவர் தான் நாடு முழுவதும் தலித்துகள் 11 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, புகார் தெரிவிக்க இருமுறை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்றுள்ளார்.

ஆனால் அவரை யோகி ஆதித்யநாத் அடித்து மோசமாக திட்டி வெளியே அனுப்பியதாக சோட்டோ லால் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சோட்டோலால் பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும், அந்த கடித்தத்தில் யோகி ஆதித்தியநாத், மாநில பாஜக தலைவர் மகேந்திர நான் பாண்டே மற்றும் சுனில் பன்ஸ்லால் ஆகியோர் குறித்து புகார் தெரிவித்துள்ளார். அதில், தனது சொந்த கட்சிக்குள் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளும் தன்னை ஒரு பொருட்டாகவே நினைப்பதில் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சோட்டே லால் தேசிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. ஆணையத்திடமும் இதுகுறித்து புகார் கடிதம் அளித்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே, பிரதமரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தலித் என்பதால் முதலமைச்சர் என்னை அடித்தார் - பாஜக எம்.பி. குமுறல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை