ஜம்மு காஷ்மீரில் இளைஞனை கடத்தி தலையை துண்டித்த தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் 24 வயதுடைய கடத்தி மன்சூர் அஹமது என்ற இளைஞனை கடத்திய தீவிரவாதிகள் அவரது தலையை துண்டித்து வீசி எரிந்துள்ளனர்.

Apr 7, 2018, 19:54 PM IST

ஜம்மு காஷ்மீரில் 24 வயதுடைய கடத்தி மன்சூர் அஹமது என்ற இளைஞனை கடத்திய தீவிரவாதிகள் அவரது தலையை துண்டித்து வீசி எரிந்துள்ளனர்.

ஏப்ரல் 4 அன்று மன்சூர் அகமது பாத் என்ற ஆடு மேய்க்கும் இளைஞர் ஒருவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, காணாமல்போன இளைஞரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் போன்மொஹல்லா ஹஜின் என்ற இடத்தில் ஒரு புதரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞரின் தந்தை அப்துல் காஃபர் பாத் சம்பவத்தின்போது குண்டடிபட்டார். கொலை செய்யப்பட்ட இளைஞரின் தந்தை கூறியதை வைத்து இச்சம்பவம் லக்சர் ஈ தொய்பா தீவிரவாத குழுவால் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், ஹஜின் பகுதியில் இதேபோல் நடைபெற்ற இரண்டாவது சம்பவமாகும். கடந்த சில மாதங்களாக காவல் துறையினர் தொடர் என்கவுண்டர் நடத்தியுள்ளனர். இந்த மோதல்களில் லக்சர் ஈ தொய்பா தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அதேபோல் போலில் கமாண்டோ உள்ளிட்ட சில பாதுகாவலர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஜம்மு காஷ்மீரில் இளைஞனை கடத்தி தலையை துண்டித்த தீவிரவாதிகள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை