இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் மகாராஷ்டிராவில் நாளைமுதல் இரவு நேர ஊரடங்கு அமல்

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மகராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக லண்டன் மற்றும் வடக்கு இங்கிலாந்து பகுதிகளில் தான் இதன் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் சில பகுதிகள் உட்பட பல இடங்களில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் துண்டித்துள்ளன. வரும் 31ம் தேதி வரை இங்கிலாந்துக்கான விமானங்களை இந்தியா ரத்து செய்துள்ளது. சவுதி அரேபியா, கடல், வான் மற்றும் தரை வழி எல்லை அனைத்தையும் மூடி விட்டது. இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவுவதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நிபந்தனைகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (22ம் தேதி) முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த சமயத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :