வங்கி பெண் ஊழியருடன் 1,618 முறை பேசி கழுத்தை நெரித்த கொத்தனார்

வேலை கிடைத்ததும் பிரவீனுடன் நட்பு கொண்ட ஸ்நேகலதாவை கொன்ற ராஜேஷ் கைது. வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்ததும் தன்னுடனான தொடர்பை முறித்தால் ஆத்திரமடைந்த கொத்தனார், இளம் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. கூட்டி ராஜேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருடன் ஸ்நேகலதா (வயது 19) என்ற பெண் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஸ்நேகலதாவுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை கிடைத்துள்ளது. அதன்பின்னர் அவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பிரவீண் என்பவருடன் நட்பாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிரவீனுடன் பழகுவதால் தன்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டதாக கூட்டி ராஜேஷ் ஆத்திரமடைந்துள்ளார். கடந்த செவ்வாயன்று தன்னை சந்திக்குமாறு கூட்டி ராஜேஷ், ஸ்நேகலதாவை அழைத்துள்ளார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் அனந்தபுரம் என்ற ஊரை நோக்கிச் சென்றுள்ளனர். வழியில் பதனபள்ளி என்ற இடத்தில் வயல்வெளிகள் இருக்கும் பகுதியில் கூட்டி ராஜேஷ், பிரவீனுடன் பழகுவது குறித்து ஸ்நேகலதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியநிலையில் ஸ்நேகலதாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஸ்நேகலதாவிடம் இருந்த வங்கி தொடர்பான ஆவணங்களை எரித்து அவரது உடல்மேல் போட்டுள்ளார்.

காகிதம் எரிந்தநிலையில் உடலில் விழுந்ததால், உடலின் ஒருபகுதியும் எரிந்துள்ளது. அவரது உடல் தர்மாவரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து புறப்படுவதாக போன் செய்த ஸ்நேகலதா இரவு ஒன்பதரை மணி வரைக்கு வந்து சேராததால் அவர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த போலீசார், கடந்த ஓராண்டு காலத்தில் 1,618 முறை கூட்டி ராஜேஷும் ஸ்நேகலதாவும் தொலைபேசி மூலம் பேசியதை கண்டுபிடித்தனர். அதன்பேரில் அவரை பிடித்து விசாரித்தபோது, பிரவீனுடன் பழகியதன் காரணமாக ஸ்நேகலதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :