நடிகர் ஆற்றில் மூழ்கி இறந்ததை நம்ப முடியவில்லை... உதவி இயக்குனர் வேதனை

பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர் நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் சமீபத்தில் பிஜு மேனன் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிய படம் ஐயப்பனும் கோஷியும். பிரபல இயக்குனர் சச்சி டைரக்ட் செய்த இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருந்தவர் அனில் நெடுமங்காடு (48).

இந்தப் படத்தில் அனில் பேசிய சில டயலாக்குகள் மலையாள சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர் அனில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நாடகம், டிவி என கலை உலகில் இருந்து வந்து போதிலும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தான் மலையாள சினிமாவில் நுழைந்தார். அதற்குள் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவில் பரபரப்பாகப் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் ஆனார்.

இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிந்த பின் அருகில் உள்ள மலங்கரா என்ற அணையில் நன்பர்களுடன் குளிக்கச் சென்ற போது அணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நடிகர் அனிலின் இந்த திடீர் மறைவு மலையாள சினிமா உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அனிலின் மறைவு குறித்து இவர் கடைசியாக நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் கூறியது: கடந்த 20 நாட்களாக நடிகர் அனில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.

கடந்த 2 நாட்களாக அவருக்குப் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் அவரது அறையில் தான் தங்கியிருந்தார். எப்போதும் எங்களிடம் அனில் மிகவும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பழகி வந்தார். அவரது திடீர் மறைவை எங்களால் நம்பவே முடியவில்லை. நேற்று மாலையில் அவர் நண்பர்களுடன் அணைக்குக் குளிக்கச் சென்றார். அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். ஆழமான இடத்தில் அவர் மூழ்கியதாக நண்பர்கள் தெரிவித்தனர். 8 நிமிடங்களில் அவரை மீட்டு விட்டனர். ஆனாலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். நடிகர் அனிலின் மறைவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :