எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் இன்று கொல்லம்- திருவனந்தபுரம் பாதையில் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் மங்களூரு- திருவனந்தபுரம் இடையே மலபார் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் இந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. நேற்றிரவு இந்த ரயில் வழக்கம் போல மங்களூருவில் இருந்து புறப்பட்டது. இன்று காலை 7:45 மணியளவில் இந்த ரயில் கொல்லத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்போது என்ஜினுக்கு அடுத்து இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் புகை அதிகரித்தது. இதை கவனித்த அடுத்த பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் அங்கு நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டியில் தீ எரிவதை பார்த்த அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த பார்சல் பெட்டியில் மோட்டார் பைக்குகள் இருந்தன.

அவை ஒன்றுடன் ஒன்று உரசி பெட்ரோல் டேங்கில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தீ விபத்தில் 3 பைக்குகள் எரிந்து நாசமாயின. பின்னர் தீப்பிடித்த பெட்டியை கழட்டி விட்ட பிறகு 2 மணிநேரம் தாமதமாக அந்த ரயில் திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் கொல்லம்- திருவனந்தபுரம் பாதையில் பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பயணிகள் தக்க சமயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :