முகக் கவசம் இல்லையா 50 புஷ் அப் எடுக்கணும் இந்தோனேஷிய போலீசார் அதிரடி

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இந்தோனேசிய போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். கையில் பணம் இல்லாதவர்கள் 50 முறை புஷ் அப் எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டனர்.உலகம் முழுவதும் கொரோனா என்ற பயங்கர நோய் பரவிக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் அந்த பீதி மக்களிடம் இருந்து அகலவில்லை.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து உள்பட நாடுகளில் இந்நோய்க்குப் பலியாகுபவர்கள் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இதற்கிடையே இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேறு பயமுறுத்தி வருகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம், வழக்கு எனப் பல கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் எல்லா நாட்டிலும் இருக்கத் தான் செய்கின்றனர்.

இந்நிலையில் இந்தோனேசிய நாட்டில் விதிமுறைகளை மீறி முகக் கவசம் அணியாமல் பொது இடத்தில் சென்றவர்களுக்கு அந்நாட்டு போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். இங்கும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வர்களுக்கு அபராதம் வழக்கு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு உள்ள பாலி நகரில் சம்பவத்தன்று பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் 70 பேரிடம் இருந்து தலா 7 டாலர் அபராதமாக வசூலிக்கப்பட்டது. சிலர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறினர். இதையடுத்து அவர்களை அந்த இடத்திலேயே புஷ்-அப் எடுத்து விட்டு செல்லுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் நல்ல பிள்ளையாக ஒழுங்காக புஷ் அப் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்தோனேசிய போலீசாரின் இந்த நூதன தண்டனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :