ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

Apr 16, 2018, 10:03 AM IST

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதைதொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஆந்திரபிரதேச பிரத்யேக ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்தது. இதற்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், முழு அடைப்பு போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை