மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் மோடியின் தாய்க்கு பஞ்சாப் விவசாயி கடிதம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்படி மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் என்று கூறி பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்தங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவரை 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. புதிய சட்டத்தை கண்டிப்பாக வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினரும், வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருந்ததால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த 10வது கட்ட பேச்சுவார்த்தையின் போது புதிய சட்டங்களை 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் அதை ஏற்கவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இதில் 2 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பிரோசாபூர் பகுதியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்ற விவசாயி பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென்னுக்கு, புதிய சட்டத்தை வாபஸ் பெற மகனிடம் அறிவுறுத்துமாறு கூறி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பது: போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்காக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தங்களது மகனுக்கு புரியவைத்து இந்த புதிய சட்டத்தை வாபஸ் பெறுமாறு கூறவேண்டும். யாரும் தன்னுடைய தாய் சொல்லை தட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். மிகவும் துக்கத்துடன் தான் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். உங்களுக்கு தெரிவதைப் போல 3 கறுப்பு சட்டங்கள் காரணமாக நாட்டுக்கு உணவு ஊட்டும் விவசாயிகள் கடந்த பல நாட்களாக டெல்லியில் சாலைகளில் தான் தூங்குகின்றனர். அவர்களில் வயதானவர்களும், குழந்தைகளும் உள்ளனர். குளிர்காலம் என்பதால் பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உங்களது மகனுக்கு புரியவைத்து சட்டத்தை வாபஸ் பெற கூற வேண்டும். இவ்வாறு ஹர்பிரீத் சிங் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :