மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்.. கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி..

கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.1) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

அடுத்த 6 ஆண்டுகளில் ஆரம்ப, நடுத்தர சுகாதாரத் திட்டங்களில் ரூ.64,180 கோடி முதலீடு செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். தேவைப்பட்டால் இன்னும் கூடுதலாக ஒதுக்கப்படும். தற்போது 5 மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் போடப்படும். இந்தியாவில் விரைவில் மேலும் 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டில் நாடு முழுவதும் 11 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ஒரு கோடியே 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 3,500 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை, கொச்சின், பாரதீப் உள்பட 5 மீன்பிடி துறைமுகங்கள், மெகா மீன்பிடி துறைமுகங்களாக மேம்படுத்தப்படும்.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 15 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

2021-22ம் ஆண்டில் வேளாண் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு 16 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு 2020-21ம் ஆண்டில் நெல் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 43.36 லட்சம் கோதுமை விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கொள்முதல் நிலுவைத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு துறையில் அன்னிய நேரடி முதலீடு தற்போது உள்ள 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்க அனுமதிக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 100 நகரங்களில் எரிவாயு குழாய் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூ.2 ஆயிரம் கோடியில் தனியார் ஒருங்கிணைப்புடன் 7 துறைமுகத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செயயப்படும். அதில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனச் செலவுகளுக்கு ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மாநிலங்களில் புதிதாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் 675 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் நலத் திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஏப்ரல்-மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த மாநிலங்களில் பாஜக வெற்றிக்காக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds