750 புதிய ஏகலைவா பள்ளிகள்.. 100 புதிய சைனிக் பள்ளிகள்... பட்ஜெட்டில் அறிவிப்பு!

by Sasitharan, Feb 1, 2021, 18:44 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் 8-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய முயற்சியில் டிஜிட்டல் முறையில், நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்களில் நிர்மலா சீதாராமன் முடித்தார்.

பட்ஜெட்டில் கல்வி சார்ந்த அறிவிப்பு பின்வருமாறு:


கல்வித்துறை:

* 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்.
* காஷ்மீரின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
* மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படும்.

* ஆதிதிராவிட மாணவ - மாணவியருக்கு உதவும் வகையில் அடுத்த 6 ஆண்டுகளில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.
* அடுத்த ஐந்தாண்டுகளில் தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு 50,000 கோடி ஒதுக்கீடு.

விண்வெளித்துறை:

* இந்திய விண்வெளித்துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடங்கப்படும்.
* நியூ ஸ்பேஸ் இந்தியா மூலம் பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.
* 2021-ம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.

பிற அறிவிப்புகள்:

* நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கிமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்கப்படும்.
* கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

You'r reading 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.. 100 புதிய சைனிக் பள்ளிகள்... பட்ஜெட்டில் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை