போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கிருமி நாசினி.. மருத்துவமனையில் 12 குழந்தைகள்..

மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாகக் கிருமிநாசினி(சானிடைசர்) கொடுக்கப்பட்டதால், 12 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் நேற்று(பிப்.1) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் யவத்மால் என்ற மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. அப்போது மருந்து கொடுத்த செவிலியர் ஒருவர் தவறுதலாகச் சொட்டு மருந்து பாட்டிலுக்குப் பதிலாகக் கிருமிநாசினி பாட்டிலை எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டார். குழந்தைகள் மயங்கி விழவே அங்குள்ளவர்கள் சுதாரித்துக் கொண்டு பார்த்தனர். அப்போது தான் குழந்தைகளுக்குத் தவறுதலாகக் கிருமிநாசினி ஊற்றப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, உடல்நலம் பாதித்த 12 குழந்தைகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட தலைமை அதிகாரி ஸ்ரீகிருஷ்ண பஞ்சால் கூறுகையில், சம்பவம் தொடர்பாக டாக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு நன்றாக உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :