பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு.. விமான நிலையத்தில் மோடியின் சகோதரர் திடீர் உண்ணாவிரதம்..

தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். அப்போது அவரை வரவேற்க வந்திருந்தவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றது அவருக்கு தெரிய வந்தது. உடனே அவர் விமான நிலையத்திலேயே ஒரு நாற்காலியைப் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினர்.

ஆனால், அவர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினார்.மேலும், பிரகலாத் மோடி கூறுகையில், என்னை வரவேற்க எனது ஆதரவாளர்கள் 100 பேர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் காரணமின்றி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் சிறையில் உள்ள போது நான் இந்த இடத்தை விட்டுச் செல்ல முடியாது. பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டால், பிரதமர் அலுவலக உத்தரவின்படியே அவர்களை போலீசார் கைது செய்ததாகக் கூறினார்கள். அப்படியானால், அந்த உத்தரவைக் காட்டுங்கள் என்று கேட்டால் பதில் இல்லை. வேண்டுமென்றே பிரதமர் அலுவலகத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள். நான் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறேன். கைதானவர்களை விடுவித்தால்தான் வெளியேறுவேன் என்றார்.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து பிரகலாத் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். விமான நிலைய கூடுதல் பொது மேலாளர் பூபேந்திரசிங் கூறுகையில், பிரகலாத்தின் ஆதரவாளர்கள், 144 தடையுத்தரவு உள்ள உயர்பாதுகாப்பு பகுதிக்குள் சென்றதால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக மோடி பொறுப்பேற்ற போது அவரது குடும்பத்தினரைப் பற்றிய செய்திகளே வெளியே வராது. ஆனால், சமீப காலமாக அவரது சகோதரர்கள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds