ரூ.5-க்கு முட்டையுடன் சாப்பாடு: புதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் மம்தா!

by Sasitharan, Feb 16, 2021, 19:50 PM IST

மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார். விரைவில் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேரதல் நடைபெறவுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விதமாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும் என்றும் ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்குவுள்ளதாகவும் படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தெரிவித்துள்ளனர்.

You'r reading ரூ.5-க்கு முட்டையுடன் சாப்பாடு: புதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் மம்தா! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை