பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் உள்பட 19 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-51 ஒன் ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது

by Balaji, Feb 27, 2021, 19:07 PM IST

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 8.54 க்கு துவங்கியது. அனைத்து செயற்கைக் கோள்களும் சூரிய ஒத்திசைவு சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதில் முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகளாகும் . இது பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதேபோல், அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், நாளை 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் இந்த ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது.தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளான 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் இன்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. தொடர்ந்து முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

You'r reading பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை