மாட்டுக்குப் போடுகிற ஊசியா? கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி

திங்கள்கிழமை அதிகாலை புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவுதான் பிரதமர் மோடி தடுப்பூசி போடுவதற்கு வர இருக்கும் செய்தி மருத்தவமனைக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், மறுநாள் திங்கள் வார நாளாக இருப்பதினால் மற்ற நோயாளிகளுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இருக்கும்படி காலை 6:30 மணிக்கே பிரதமர் வந்ததாகவும் எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு தடுப்பூசி போட வேண்டிய விஷயம், தடுப்பூசி பிரிவினருக்கு காலையில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவுக்கு வந்ததும் சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கும்வண்ணம் பிரதமர் அங்கிருந்தவர்களிடம் உரையாடியதாகக் கூறப்படுகிறது.

அங்கே இருந்தவர்களின் பெயர்கள் மற்றும் ஊர் விவரங்களை கேட்ட பிரதமர், "இது மாட்டுக்குப் போடுகிற ஊசியா?" என்று கேட்டதாகவும், "இல்லை" என்று பதிலளித்த செவிலியர் அவர் ஏன் கேட்டார் என்பது புரியாமல் பார்த்ததால், "அரசியல்வாதிகளுக்கு தோல் தடித்திருக்கும் என்று சொல்வார்களே, அதனால் எனக்காக விசேஷமாக பருமனான ஊசி வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகே பிரதமர் நகைச்சுவையாக பேசுகிறார் என்பது தெரிந்து அந்த இடம் கலகலப்பானது. புதுச்சேரியை சேர்ந்த நர்ஸ் பி. நிவேதா, பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளார். ஊசி போட்டு முடித்ததும், "முடிந்துவிட்டதா? எனக்கு ஊசி போட்டதே தெரியவில்லை?" என்றும் பிரதமர் கூறியுள்ளார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரை மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

"தடுப்பூசி போட தகுதியுள்ளவர்கள் அனைவரும் போட்டுக்கொண்டு, நம் நாட்டை கொரோனா இல்லாத நாடாக்கவேண்டும்" என்றும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 60 வயது வரையுள்ளவர்களில் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடிய உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் முதலில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு www.cowin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். ஒரு நபர், ஒரு தொலைபேசி எண்ணைக் கொண்டு நான்கு பேருக்கு பதிவு செய்யலாம். ஆனால், தடுப்பூசி போடப்படும்போது நான்கு பேரும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, என்பிஆர் ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட ஏதாவது ஓர் ஆவணத்தை காட்டவேண்டும் என்று கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :