கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா..! தெலங்கானாவில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு...

by Logeswari, Apr 30, 2021, 16:06 PM IST

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 646 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 77 ஆயிரத்து 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 618 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,261 ஆக அதிகரித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இரவு நேர ஊடரங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மே 8-ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா..! தெலங்கானாவில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு... Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை