தயார் நிலையில் சிறை...விஜய் மல்லையாவுக்காகக் காத்திருக்கிறதாம்!
விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் இந்தியாவின் சிபிஐ அதிகாரிகள் சார்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது இன்று வழக்கில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றம் ஆகும்.
இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதுநாள் வரையில் இந்திய சிபிஐ அதிகாரிகள் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தனர்.
இன்று நடந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்த ஆதாரங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக லண்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது வழக்கு விசாரணையில் மல்லையாவுக்கு எதிராக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகும்.
விசாரணை தீவிரமடையும் சூழலில் மல்லையாவுக்கு நிச்சயம் சிறைத்தண்டனை கிடைக்குமென்றும் இந்தியாவில் மல்லையாவுக்கான சிறை தயாராக உள்ளதெனவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading தயார் நிலையில் சிறை...விஜய் மல்லையாவுக்காகக் காத்திருக்கிறதாம்! Originally posted on The Subeditor Tamil
More India News