புழுதிப் புயல்... உபி-யில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
புழுதிப்புயல்... உத்தரப் பிரதேசத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புழுதிப் புயல் மற்றும் மழையால் காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புயல் பாதிப்பு 25 மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, டெல்லியில் மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப் புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதேபோல,மேற்கு வங்கம், ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் புழுதிப் புயலும் வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading புழுதிப் புயல்... உபி-யில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! Originally posted on The Subeditor Tamil
More India News