போராட்டத்துக்குப் போனால் மஞ்சள் காமாலை வரும்- சாபம்விடும் அமைச்சர்

by Rahini A, May 21, 2018, 18:37 PM IST

”எதிர்கட்சியினர் நடத்தும் போராட்டங்களுக்குப் போனால் மஞ்சள் காமாலை வரும்” என உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் சாபம்விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் சுகெல்தேவ் பாரத் சாமாஜ்வாதி கட்சியின் மூத்த அமைச்சராக பதவி வகித்து வருபவர், அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்த அமைச்சர் உ.பி. மக்களுக்கு இந்த சாபத்தை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஓம் பிரகாஷ் கூறுகையில், “பாஜக-வின் பிரதமர் மோடி உத்தரபிரதேச தேர்தலின் போது உ.பி.-யை குஜராத் போல் மாற்றுவதாகக் கூறியிருந்தார். ஆனால், இதுவரையில் ஒன்றும் நடக்காததால் மோடிக்கு அவரது வாக்குறுதியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும், எதிர்கட்சியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்கு எல்லாம் மக்கள் போகக்கூடாது. மீறினால் அவர்கள் என் சாபத்துக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும். அடுத்ததாக என் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக வந்துதான் உங்கள் காமாலையைப் போக்க வேண்டியது வரும்” எனக் கூறி சிரிப்பு மூட்டியுள்ளார் இந்த அமைச்சர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading போராட்டத்துக்குப் போனால் மஞ்சள் காமாலை வரும்- சாபம்விடும் அமைச்சர் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை