ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி பிரணாப் தலைமையிலா?- கொதிப்பில் காங்கிரஸ்

by Rahini A, Jun 8, 2018, 14:41 PM IST

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அதன் தலைமை இடமான நாக்பூருக்குச் சென்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சி மத்தியிலேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ராஷ்டிரிய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் தான் மத்தயில் ஆளும் பாஜக-வின் கொள்கை ரீதியில் தாய் வீடு. இந்துக்கள் ஆளும் ராம ராஜ்ஜியம் இந்தியாவில் அமைக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய குறிக்கோள்.

ஆனால் காங்கிரஸோ, மதசார்பற்ற விதத்தில் இந்தியாவின் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று தனது கொள்கையை வகுத்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் தலைமை இடம் இருக்கும் நாக்பூருக்குச் சென்று ஒரு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் என்பது டெல்லி வட்டாரத்தில் மிகப் பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

பிரணாப், இன்று மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த விவகாரம் குறித்து கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மிகுந்த கொதிப்படைந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி பிரணாப் தலைமையிலா?- கொதிப்பில் காங்கிரஸ் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை