கவர்னர் அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம்

டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னர் அலுவலகத்தில் இன்றுடன் 3வது நாளாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டெல்லி அரசின் தலைமை செயலாளர் அனு பிரகாஷ் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அமைச்சர்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக பேச அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை கவர்னர் பைஜாலை நேற்று முன்தினம் மாலை சந்தித்தனர். அப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்க சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

இதன் பின்னர், கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை அமைச்சர்களுடன் தொடங்கினார். கவர்னர் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என இன்றுடன் மூன்றாவது நாளாக கவர்னர் அலுவலகத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds