ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் ஏலம் விட அரசு முடிவு!

ஏர் இந்தியா நிறுவனத்தை ஒரே அடியாக இழுத்து மூடாமல் இருப்பதைத் தவிர்க்க அந்நிறுவனத்தை ஏலம் விடுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பது அதிர்ச்சி அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஏலம் விட்டது.

இதற்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ஒருவர் கூட ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை. ஏர் இந்தியா, கடந்த சில காலங்களாக நஷ்டத்தில் இயங்குவதால் அந்த நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது ஏறக்குறைய 5 பில்லியன் டாலர் கடன் உள்ளது.

இந்நிலையில், விற்பனை விதிகளில் மாற்றம் செய்து மீண்டும் ஏல அறிவிப்பை வெளியிட அரசு முடிவு எடுத்துள்ளது. கடனையும் புதிதாக ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் சுமக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான், அது ஏலத்தில் எடுக்கபடவில்லை என்று விவரம் அறிந்த நபர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

விரைவில், நிறுவனம் விற்பனையானால் அதை வாங்குபவருக்கு சர்வதேச அளவில் 2,500 விமான நிலையங்களிலும், உள்நாட்டு முனையங்களில் 3,700 நிலையங்களிலும் இடம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வாங்குபவர்க்கு கடன் வசதி செய்து தரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

மத்திய அரசு இந்நிறுவனத்தை இழக்குமானால் அது மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சியாகவும், மோடியின் தனியார்மயமாக்கல் திட்டத்துக்கு ஏற்படும் நஷ்டமாகவுமே பார்க்கப்படும்.

 

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds