காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் விரிசல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநிலத்தின் கூட்டணி அரசியலில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக இன்று முதல் பதவியில் இருந்து மெகபூபா முப்தி ராஜினாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும் பாஜக 25 இடங்களையும் பிடித்தது. ஆனால், இங்கு யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பாஜக ஆதரவுடன் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி அமைத்தது. இதன் பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராகவும், பாஜக தரப்பில் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

ஆட்சி காலத்தின்போதே முப்தி முகம்மது சயீத் மறைந்துவிட்டார். இதனால், அவரது மகள் மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி & பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதைதொடர்ந்து, ஆளும் கட்சிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் டெல்லி வரும்படி பாஜக தலைவர் அழைப்பு விடுத்தார். இதனால், இன்று எம்எல்ஏக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக இன்று அறிவித்தது.

இதனால், பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சியினால், மெகபூபா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் என்.என்.வோராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds