ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்

Jun 20, 2018, 09:22 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததையடுத்து கவர்னர் ஆட்சியை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பிறகு, அவரது மகள் மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி&பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கட்சிக்கும் கூட்டணி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து, மாநில சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதிலலை என்றும் பாஜக அறிவித்துவிட்டது.

இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த அனுமதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு கவர்னர் வோரா பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.

You'r reading ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை