அறிவியல் பூர்வமற்ற முறையில் காவிரி ஆணையம்!- குமாரசாமி

by Rahini A, Jun 30, 2018, 20:33 PM IST

”அறிவியல் பூர்வமற்ற முறையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. இதில் கர்நாடகா, காவிரி ஆற்றில் அணைகள் கட்டி, மற்ற மாநிலங்களுக்குத் தேவையான நீரை திறந்து விடாமல் வஞ்சித்து வந்தது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், `மத்திய அரசு, நான்கு மாநிலங்களுக்கு மத்தியில் நிலவி வரும் நீர் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறி காவிரி பங்கீடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு அமைத்து நீர் வளத் துறைத் தலைவர் மசூத் ஹூசைனைத் தலைவராக நியமித்து வாரியம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்கான கர்நாடகா மாநில உறுப்பினர்களை முதல்வர் குமாரசாமி நியமித்தார். தற்போது குமாரசாமி, “கர்நாடகா எப்போதும் உச்சநீதிமன்றத்தையும் அதன் வழிகாட்டுதல்களையும் மதிக்கும் அறிவியல் பூர்வமற்ற முறையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கல்களுக்கு தீர்வு காண கர்நாடக அரசு தொடர்ந்து போராடும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

You'r reading அறிவியல் பூர்வமற்ற முறையில் காவிரி ஆணையம்!- குமாரசாமி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை