போதையில் நீதிமன்றத்தில் அட்டகாசம் செய்த போலீஸ்காரர் கைது!

by Rahini A, Jul 2, 2018, 17:03 PM IST

மத்திய பிரதேசத்தில் போலீஸ் பயிற்சியில் இருக்கும் ஒரு நபர், நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி இல்லாத நேரத்தில் நீதிபதியின் இருக்கையிலேயே அமர்ந்து செல்ஃபி எடுத்து அட்டகாசம் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உமாரியாவில் போலீஸ் ட்ரெய்னியாக இருப்பவர் 28 வயதாகும் ராம் அவதார் ராவத். அவர் உமாரியாவில் இருக்கும் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்றுக்குச் மது போதையில் இருந்த போது சென்றுள்ளார்.

அங்கே நீதிபதி நாற்காலியில் யாரும் இல்லை என்பதைப் பார்த்துள்ளார். இதையடுத்து, அந்த சீட்டில் அமர்ந்து செல்ஃபிக்களை க்ளிக் செய்ய ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து அவர் இப்படி செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க, நீதிமன்ற வளாகத்தல் பெரிதாகக் கூட்டம் இல்லாததால் யாரும் கவனிக்கவில்லை.

ஆனால் சக்தி சிங் என்கின்ற நீதிமன்ற பணியாளர் ராவத், நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துள்ளார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார் ராவத். ஆனால் சிங், ராவத்தை கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ராவத் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

You'r reading போதையில் நீதிமன்றத்தில் அட்டகாசம் செய்த போலீஸ்காரர் கைது! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை