மீண்டும் ஒரு படுகொலை: வதந்தியால் ஐவர் பலி

குழந்தை கடத்தல்காரர்கள் என்று கிளம்பிய வதந்தியாலும் அதனால் உண்டான சந்தேகத்தாலும் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா, துலே நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பழங்குடியின மக்கள் வாழும் ரெய்ன்பாடா கிராமம். இந்த கிராமத்துக்கு 7 பேர் பேருந்து மூலம் வந்துள்ளனர். அவர்கள் 7 பேரும் கிராமத்திற்கு வேலை தேடி வந்தததாகக் கூறப்படுகிறது.

கிராமத்திலிருந்து சந்தை பகுதிக்குச் சென்ற அவர்கள் அக்கம் பக்கத்தில் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் குழந்தை ஒன்றிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ஊர்காரர் ஒருவர், அவரை குழந்தை கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பலர் அவருடன் சேர்ந்து 7 பேரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தால், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் தப்பித்துவிட்டனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த போலீஸ், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது.

பலரை இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளது போலீஸ். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் ஆண்களாகவே இருக்கின்றனர். கொலை செய்யப்பட்டரவகள் மகாராஷ்டிர மாநிலத்தின் சொலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds