பையில் பாம்பு இருப்பது அறியாமல் பள்ளிக்கு சென்ற மாணவன் அதிர்ச்சி

பையில் பாம்பு இருப்பது தெரியாமல் பள்ளிக்கு சென்ற மாணவன் அங்கு பையை திறந்து பார்த்ததும் பயத்தில் ஓட்டம்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜநகர் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன், கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

புத்தகப்பை எடுத்து தனது தோளில் மாட்டிக் கொண்ட மாணவன் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு புறப்பட்டான். பள்ளியை சென்றடைந்து வகுப்பு ஆரம்பிக்கும்போது தான் மாணவனுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தனது பையில் இருந்த புத்தகத்தை எடுக்க திறந்து பார்த்தபோது புத்தகங்களின் நடுவில் நாகப்பாம்பு ஓன்று இருந்ததை கண்டு மாணவன் அதிர்ச்சியடைந்தான். பாம்பை பார்த்த பயத்தில் புத்தகப் பையை வீசியடித்த மாணவன் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம்பிடித்தான்.இதுகுறித்து, பள்ளி ஆசிரியருக்கு தெரியவந்ததை அடுத்து, போலீஸ் உதவியுடன் பாம்பை அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “நல்ல வேளையாக மாணவன் முதலில் பையை திறந்து பார்த்துள்ளான். பார்க்காமல் புத்தகம் எடுக்க கையைவிட்டிருந்தால் அபாய நிலைக்கு மாணவன் தள்ளப்பட்டிருப்பான். பையில் பாம்பு இருப்பது தெரியாமலேயே 1 கி.மீ., சுமந்தபடி பள்ளிக்கு வந்தது தான் ஆச்சரியம்” என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் பையை வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்திருந்தேன். அத்துடன் இன்று காலை தான் அந்த பையை எடுத்துக் கொண்டு வந்தேன். இதற்கிடையே, பையை நான் திறந்து பார்க்கவில்லை என்று மாணவன் தனது ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளான்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds