பெட்ரோல் - டீசல் விலை உயரும்? - வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலை அதி கரித்துக் கொண்டே வருவதால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Petrol Diesel

கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 38.99 டாலர் என்ற அளவிற்கு சரிந்தது. அமெரிக்கச் சந்தைக்குப் போட்டியாக வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய்யை அதிகளவில் உற்பத்தி செய்து வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வந்தததால் கடந்த 2 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டே வந்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, எந்தளவிற்கு விலை சரிந்ததோ, அதை விட இரண்டு மடங்கு பெட் ரோல் - டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டது.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் மட்டும், கடந்த ஆண்டு ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 534 கோடியை மோடி அரசு ஈட்டியது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 147 டாலர் என்ற அளவிற்கு இருந்தது. அப்போதும் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 73 என்ற அளவில்தான் இருந்தது.

ஆனால், மோடி அரசுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை வெறும் 26 ரூபாய் 65 காசுகள் என்ற நிலையில், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோலை 73 ரூபாய்க்கு விற்றது. கச்சா எண்ணெய் விலை 37 டாலராக குறைந்த போதும், பெட்ரோல் விலை ரூ. 73ஆகவே உள்ளது.

தற்போது நிதி தேவைக்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை வளைகுடா நாடுகள் குறைக்கத் துவங்கியுள்ளன. இதனால் தற்போது ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 65.54 டாலர் வரை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (OPEC) மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளதால், சந்தையில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையில் உயர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds