நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு- யார் பக்கம் சிவசேனா?

Jul 19, 2018, 12:18 PM IST

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது சிவசேனா கட்சி எந்தப் பக்கம் நின்று யாருக்கு ஆதரவு தரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு ஒன்றின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முதன்முறையாக நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் வெள்ளிக் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்கட்சிகளுடன் சிவசேனா கை கோக்குமா அல்லது பாஜக-வுக்கு தோல் கொடுக்குமா என்பதில் தொடர்ந்து சந்தேகம் இருந்து வருகிறது.

இது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ஆனந்த் குமார், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, எதிர்கட்சிகள் கொண்டு வரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக எங்கள் தோழமை கட்சிகள் அனைத்தும் வாக்களிக்கும்’ என்று தகவல் தெரிவித்தார்.

ஆனால், சிவசேனாவுக்கும் பாஜக-வுக்கும் கடந்த சில காலங்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, ‘வரும் 2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிடும்’ என்றும் அறிவித்துள்ளார். இதனால், வெள்ளிக் கிழமையன்று நடக்கவுகள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் முடிவு மிகுந்த கவனம் பெறும் என்று கூறுப்படுகிறது. 

You'r reading நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு- யார் பக்கம் சிவசேனா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை