திருமுருகன் காந்தி பெங்களூருவில் கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து கர்நாடகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
thirumurugan gandhi
 
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை வந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் வெளியே வந்தனர். அவர்களது உடமைகளை சுங்க அதிகாரிகளும் போலீசாரும் சோதனை செய்தபோது அதில் தமிழக போலீசாரால் தேடும் நபர் பட்டியலில் இருந்த திருமுருகன் காந்தி வந்திருப்பது தெரியவந்தது. 
 
உடனடியாக தமிழக போலீசாருக்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக போலீசார் திருமுருகன் காந்தியை பிடித்து வைக்குமாறு விமான நிலைய போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து திருமுருகன் காந்தியை பிடித்த கர்நாடகா போலீஸ், அவரை விமானநிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
 
பின்னர் விமான நிலைய டிஜிபி அலுவலகத்திற்கு திருமுருகன் காந்தி அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். 
 
மே 17 இயக்கத்தின் சேர்ந்த திருமுருகன் காந்தி கூடங்குளம்  அணு உலை எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே அவர் மீது தமிழக போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருந்தனர் இந்நிலையில் அவர் தலைமறைவாக இருந்ததால் அவரது பெயரை தேடும் நபர் பட்டியலில் தமிழக போலீசார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். "பாசிச வெறியாட்டம் போடும் மத்திய அரசும், அதற்குக் குற்றேவல் செய்யும் தமிழக அரசும் திருமுருகன் காந்தியின் குரலை ஒடுக்க வேண்டுமென திட்டம்." 
 
"அதன் விளைவாகத்தான் கர்நாடக காவல்துறையைப் பயன்படுத்தி பெங்களூரில் கைது செய்துள்ளனர். இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" வைகோ வலியுறுத்தியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :