ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித்தை நோக்கி வந்த துப்பாக்கி குண்டு

டெல்லியில் ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித்தை சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Umar Khalid

நாளை சுந்தந்திர தினம் கொண்டாடப்ப பட உள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உமர் காலித்தை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.

இந்த தாக்குதலில் ஜே.என்.யு மாணவர் தலைவர் உமர் காலித் காயம் இன்றி உயிர் தப்பினார். காலித்துடன் இருந்த மாணவர்கள், துப்பாக்கியால் சுட்ட நபரை பிடிக்க முயன்ற போது அந்த நபர் தப்பி ஓடினார். அந்த நபர் ஓடும்போது அவரின் துப்பாக்கி கைதவறி கீழே விழுந்தது.

அதனை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ஜே.என்.யு மாணவர் தேர்தலில் பல்வேறு கலவரங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மாணவர் சங்க தேர்தலில் உமர் காலித் வெற்றி பெற்றதை ஏற்று கொள்ளாதவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உமர் காலித் நலமுடன் இருப்பதாக டெல்லி இணை ஆணையர் கூறியுள்ளார்.