பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் உடல்நலக் குறைவால் காலமானார்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.

பாகிஸ்தான், சியால்கோட் பகுதியில் 1923ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி பிறந்தவர் குல்தீப் நய்யார். எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகராகவும் தனது பணியை தொடங்கி பிரபலமானார்.

இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான குல்தீப் நய்யார் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐ.நா சபையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

மேலும், இவர் எல்லைகளுக்கு இடையே, தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை, நேருவுக்குப் பிறகு இந்தியா, ஸ்கூப் போன்ற பிரபல புத்தகங்கள் உள்பட 11 புத்தகங்களை அவர் எழுதி உள்ளார்.

குல்தீப் நய்யாருக்கு 95 வயது ஆகும் நிலையில், வயது முதிர்வால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குல்தீப் நய்யார் மரணமடைந்தார். குல்தீப் நய்யாரின் மறைவுக்கு பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds