கேரளாவில் விஷ ஊசி போட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

கேரளாவில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பொன்குன்னம் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (38). இவரது மனைவி மனு (32). இவர்களுக்கு, மணிக்குட்டி (10), உன்னிகுட்டி (5) என இரண்டு மகள்கள். இவர்களுடன் பிஜூவின் தாய் பொன்னம்மாள் (65) வசித்து வந்துள்ளார். பிஜூ பாலா நகரில் உள்ள இரும்பு கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், பிஜூ நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய பிஜூவிற்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பிஜூ வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, தாய், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இறந்து கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிஜூ செய்வதறியாமல் கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில், விஷபாட்டிலும், ஊசியும் இருந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர். இதனால், அனைவரும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர் என்பது தெரியவந்தது.

பின்னர், நான்கு பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில், பிஜூவின் குடும்பத்தினர் கந்துவட்டி வாங்கியதாகவும், இதனை கேட்டு கந்துவட்டி கும்பல் 3 பேர் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால், மனமுடைந்து போன மனு, குழந்தைகள் மற்றும் மாமியாருடன் விஷ ஊட்டி போட்டு தற்கொலை கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.

கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds