மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு முதலிடம்

மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2018 ஜூலை 31 வரையுள்ள மதிப்பீட்டின்படி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுள் இந்த வங்கிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், உத்திரவாத கடிதங்கள் மற்றும் வங்கியின் ஸ்விஃப்ட் (SWIFT) பரிவர்த்தனை மூலம் 13,500 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் தெரியவந்தது. அதனால் வங்கி அதன் கட்டுப்பாடுகளை பலப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
 
பொருளாதார சேவை துறை, வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மதிப்பீடு செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் தொழில்நுட்ப ரீதியில் 0.83 சதவீத பரிவர்த்தனைகளே தோல்வியடைந்துள்ளன. அதனடிப்படையில் இந்தியா முழுவதுமுள்ள வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆறாம் இடத்தையும், அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக, இதன் மேலாண் இயக்குநராக 2015 ஆகஸ்ட் முதல் 2017 மே வரை பணியாற்றி பின்பு அலஹபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஷா அனந்தசுப்ரமணியன், அவரது பதவி காலம் முடியும் கடைசி நாளன்று மத்திய அரசினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds