ஒரே ஆண்டில் ஓஹோவென்று உயர்ந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை

ரூ. 1 கோடிக்கும் அதிகமான தனிநபர் வருமானத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் 23.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Dec 22, 2017, 15:36 PM IST

ரூ. 1 கோடிக்கும் அதிகமான தனிநபர் வருமானத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் 23.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

Billionaires

இது குறித்து வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2015-16 வரி மதிப்பீட்டு ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் 59 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது என்று வருமானவரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், முந்தைய ஆண்டை விட 23.5 சதவிகித உயர்வுடன் 59 ஆயிரத்து 830 பேர் 1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுவதாகவும், இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரம் கோடி என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2014-15 வரி மதிப்பீட்டு ஆண்டின் கோடீஸ்வரர்கள் பற்றிய அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 48 ஆயிரத்து 417 கோடீஸ்வரர்கள் இருந்தனர். அவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அனைத்தும் அரசுக்குச் செலுத்தப்படும் வருமான வரியின் அடிப்படையில்தான் தெரியவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading ஒரே ஆண்டில் ஓஹோவென்று உயர்ந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை