இந்தியா-அமெரிக்கா அமைச்சர்கள் பேச்சு

Sep 6, 2018, 13:32 PM IST
இந்தியா, அமெரிக்க அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது. 
டெல்லியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இந்தியத்  தரப்பில், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 
 
இருநாட்டு பிரதிநிதிகளிடையே இன்றும், நாளையும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரு நாடுகள் இடையிலான பிரச்சினை, எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது, ஈரான் மற்றும் ரஷ்யா உடனான இந்தியாவின் நட்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading இந்தியா-அமெரிக்கா அமைச்சர்கள் பேச்சு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை