தெலங்கானாவில் கோர விபத்து: 40 பேர் பலி

தெலங்கானா விபத்தில் 40 பேர் பலி

Sep 11, 2018, 15:21 PM IST

தெலங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் 40 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

40 உயிரை காவுவாங்கிய தெலங்கானா விபத்து

தெலங்கானா மாநிலம் ஜக்டியல் மாவட்டத்தில் உள்ள கொண்டக்காட்டு என்ற பகுதியில் தான் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்பகுதியில் உள்ள மலைப்பாதை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பல பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பயணிகள் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த தெலங்கானா காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ், “இந்த விபத்து மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக” தெரிவித்துள்ளார்.

You'r reading தெலங்கானாவில் கோர விபத்து: 40 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை