பாத்திரத்தில் அமர்ந்து ஆற்றைக் கடந்து படிக்கும் சவால் சிறுமிகள்!

 

அசாம் மாநிலத்தில் அலுமினிய பாத்திரங்கள் உதவியுடன், குழந்தைகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.


பிஸ்வநாத் மாவட்டம் சூடி கிராமத்தில் ஆற்றங்கரைக்கு அப்பால் அரசு பள்ளி அமைந்துள்ளது. ஆற்றின் குறுக்கே பாலம், படகு, சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.


நாள்தோறும், தோணி போன்ற பெரிய அலுமினியப் பாத்திரங்களைக்கொண்டு ஆற்றைக் கடந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். ஆபத்து என்பதை உணர்ந்தும், பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, இந்த பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.


அலுமினியப் பாத்திரத்தின் உதவியுடன் குழந்தைகள் ஆற்றைக் கடந்துசெல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஜே.தாஸ் விவரிக்கையில், பள்ளி அமைந்துள்ள பகுதியில் ஆற்றங்கரை உள்ளது. ஆனால், ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டவில்லை. அதனால், பள்ளிக்கு வரும் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அலுமினிய பாத்திரங்கள் உதவியுடன் குழந்தைகள் ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வருகின்றனர். இதற்கு முன்னர், வாழை மரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட தற்காலிகப் படகுகளைப் பயன்படுத்தினர். குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக அரசு பாலம் அமைத்து தர வேண்டும்'' என்று கூறினார்.


இந்த விவகாரம் தொடர்பாக பிஸ்வநாத் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பிரமோத் போர்தகுர் கூறுகையில், குழந்தைகள் ஆற்றைக் கடந்துசெல்லும் காட்சியைப் பார்க்கையில் வெட்கமாக உள்ளது. இந்தப் பகுதியில் முறையான சாலை வசதிகூட அமைக்கவில்லை. ஒரு தீவில் எப்படி பள்ளியை அரசாங்கம் கட்டியது என்பது தெரியவில்லை. ஆற்றை மாணவர்கள் கடந்துசெல்ல நிச்சயம் படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அதோடு, பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

கல்விக்காக உயிரை பணையம் வைத்து ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சென்று படிக்கும் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அசாம் அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் குரலாகும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds