ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை பரிசளித்த எஜமான்!!!
ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை பரிசளித்த எஜமான்.
25 வருடத்திற்கும் மேலாக தனது நிறுவனத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு வைர வியாபாரி ஒருவர் பென்ஸ் கார் வழங்கியுள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தில் பிரபல வைர ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் சவ்ஜி தோலாகியா என்பவர். இவர் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறப்பான சலுகைகளை அவ்வப் போது வழங்கி வருகிறார். இவரது நிறுவனத்தில் தற்பொழுது 5500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்நிறுவனத்தில் 25 வருடங்களாக வேலை செய்யும் 3 ஊழியர்களை சிறப்பிக்கும் விதமாக சவ்ஜி அவர்கள் தலா ஒரு கோடி மதிப்பிலான 3 பென்ஸ் காரை மூன்று பேருக்கு வழங்கியுள்ளார். இதனை எதிர்பார்க்கவில்லை என அந்த ஊழியர்கள் மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் கூறினார்கள்.
You'r reading ஊழியர்களுக்கு 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை பரிசளித்த எஜமான்!!! Originally posted on The Subeditor Tamil
More India News