ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

hydrocarbon

டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் சுமார் 75% ஒப்பந்தங்களை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்ட 55 இடங்களில் 41 இடங்களை வேதாந்தா குழுமம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி-யும், நாகை மாவட்டம் கமலாபுரம் உள்ளிட்ட 2 இடங்களில் வேதாந்தா குழுமமும், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 9 இடங்கள், ஓ.என்.ஜி.சி- 2 இடங்கள், பிபிஆர்எல், கெயில், ஹெச்ஓஇசி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்த நிறுவனத்திற்கு 1794 சதுரஅடியில் இருந்து 2,574 சதுர அடி நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 731 சதுர அடி நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கோதாவரி படுகையிலும் கச்சா எண்ணெய் எடுக்க வேதாந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக விவசாயிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எதிர்ப்பு வராது என்றும் கடல் சார்ந்த பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds