டெல்லியில் முன்னாள் பிரதமர்களுக்கான பிரம்மாண்ட அருங்காட்சியகம்
Premier museum for former prime ministers in Delhi
டெல்லியில் முன்னாள் பிரதமர்களுக்கான பிரம்மாண்ட அருங்காட்சியகம் விரைவில் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர்களாக பதவி ஏற்று இந்தியாவை வடிவமைப்பதில் ஆற்றிய சேவைகளை நினைவுகூரும் வகையில் டெல்லியில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைய உள்ளது.
இதற்காக டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில், அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் இன்று அடிக்கல் நாட்டினர்.
You'r reading டெல்லியில் முன்னாள் பிரதமர்களுக்கான பிரம்மாண்ட அருங்காட்சியகம் Originally posted on The Subeditor Tamil
More India News