பாண்டேவுக்கு 25,000 ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் விதித்தது

திருமண வயது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கொன்றை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அதை தொடுத்த வழக்குரைஞருக்கு அபராதமும் விதித்துள்ளது.
பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் திருமணத்திற்கு 18 வயதை குறைந்த பட்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அசோக் பாண்டே என்பவர் பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
 
குழந்தை திருமண தடுப்புச் சட்டம், சிறப்பு திருமண சட்டம் மற்றும் இந்து திருமண சட்டம் ஆகியவை திருமணத்திற்கான குறைந்த பட்ச வயதை கட்டாயப்படுத்துகின்றன. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பல்வேறு விதங்களில் மறுக்கிறது. தங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உரிமையை 18 வயதில் பெறுபவர்கள், அந்த வயதில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது காரணமற்றது, நியாயமற்றது, முறையற்றது. அது அரசியலமைப்பின் 15 பிரிவினை மீறும் செயல் என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி அசோக் பாண்டே மனு தாக்கல் செய்திருந்தார்.
 
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தமது தீர்ப்பில், "18 வயதில் திருமணம் செய்ய முடியாததால் பாதிப்புறும் ஆண் வழக்கு தொடரட்டும். இந்த வழக்கில் பொது நல நோக்கு இல்லை. ஆகவே, இதை தாக்கல் செய்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கிறோம். பதினெட்டு வயதில் திருமணம் செய்ய இயலாமல் பாதிக்கப்பட்டேன் என்று யாராவது வழக்குத் தொடரும்போது, இந்தத் தொகை அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்," என்று கூறியுள்ளனர்.
 
அபராதத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds