மேற்குவங்கத்தில் கருணையின்றி தந்தையை தாக்கிய மகன்!

son who hit his father in West Bengal

Oct 26, 2018, 13:48 PM IST

மேற்குவங்க மாநிலத்தில் தாய்க்கு இனிப்பு கொடுத்த வயதான தந்தையை மகன் கருணையின்றி அடித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவின் அசோக்நகரை சேர்ந்த 80 வயது மணிக்லாலின் மகன் பிரதீப் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் இருந்து இனிப்பு பலகாரத்தை தனது மனைவிக்கு சாப்பிட கொடுத்தார். அதை சாப்பிடுவதற்கு முன்பாகவே மகன் பிரதீப் வந்துவிட்டான்

மகனைபார்த்த மூதாட்டி, இனிப்பை கணவன் கையில் கொடுத்துவிட்டு ஓடினார். இதனை பார்த்த பிரதீப், அறையில் இருந்து வெளியே இழுத்து வந்து தந்தையை கன்னத்தில் அறைந்தார். பக்கத்து வீட்டிலிருப்பவர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அசோக்நகர் காவல்துறையினர், பிரதீப்பை கைது செய்தனர்.


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு தந்தை இனிப்பு வழங்கியதால் ஆத்திரத்தில் அடித்துவிட்டதாக காவல்துறையினர் பிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து மணிக்லாலிடம் விசாரித்த போது, மகன் அடிக்கடி அடித்து சித்திரைவதை செய்வதாக கூறியுள்ளார். ஒரு இனிப்பு பலகாரத்திற்காக வயதான தந்தையை மகன் கருணையின்றி கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading மேற்குவங்கத்தில் கருணையின்றி தந்தையை தாக்கிய மகன்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை